Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

மார்ச் 04, 2021 03:57

நாகை : வேதாரண்யம் அடுத்த கோடியக்காட்டில் கடந்த ஒரு வாரமாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வாராததைக்  கண்டித்து 200க்கும்  மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிகள் கடல் சார்ந்த இடம் என்பதாலும், உப்பளங்கள் அதிக அளவில் உள்ளதாலும் குடிநீரை பணம் கொடுத்து  வாங்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக இந்த பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வரவில்லை என்பதால்  கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் குடிநீர் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஊராட்சி மன்றத்தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து குடிநீர் கேட்டு கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜு, வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவன், இன்ஸ்பெக்டர்  மலர்கொடி, வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக வேதாரண்யம் - கோடியக்கரை சாலையில் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு மேல் பாதிக்கப்பட்டது. தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. சாலை மறியலால் 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்